states

img

உ.பி. சாலை விபத்தில் 5 பேர் பலி  

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கார் டிரக்கின் மோதிய விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

உத்தரப் பிரதேசத்தில் மஹிந்திரா பொலிரோவில் இன்று அதிகாலை 7 பேர் கொண்ட குழு ஆக்ராவிலிருந்து நொய்டா நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது கிரேட்டர் நொய்டாவில் உள்ள யமுனா விரைவுச் சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது, ஜெவார் டோல் பிளாசா அருகே பின்புறத்தில் இருந்து டிரக்(டம்பர்) மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 4 பேர் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காரில் பயணித்த 7 பேரில் 5 உயிரிழந்த நிலையில், ஜீவார், கைலாஷ் ஆகிய 2 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.  மேலும் அங்கிருந்த டிரக்கை பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர். 

;